ஆமை வேக பந்துவீச்சு: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ஆமை வேக பந்துவீச்சு: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ஆமை வேக பந்துவீச்சு: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!
Published on

டெல்லி அணியுடனான போட்டியில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் மோதின. இதில் டெல்லியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் மும்பை அணி மெதுவாக பந்துவீசியதன் காரணமாக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

முன்னதாக சிஎஸ்கே கேப்டன் தோனிக்கும் இதே காரணத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதே அணிகள் மீண்டும் மெதுவாக பந்துவீசினால் ரூ.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகை ஆட்ட சம்பளத் தொகையில் இருந்து கழிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com