காயத்தில் இருந்து மீண்டாரா ரோகித் சர்மா? களமிறங்க தயாராகிறாரா 'ஹிட்மேன்'

காயத்தில் இருந்து மீண்டாரா ரோகித் சர்மா? களமிறங்க தயாராகிறாரா 'ஹிட்மேன்'
காயத்தில் இருந்து மீண்டாரா ரோகித் சர்மா? களமிறங்க தயாராகிறாரா 'ஹிட்மேன்'

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, காயத்தில் இருந்து மீண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் களம் இறங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டிசம்பர் 22-ம் தேதி மிர்பூரில் நடக்கவிருக்கும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, பங்கு பெறுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று 2ஆவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது ரோகித் சர்மாவின் விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரால் கடைசி ஒருநாள் போட்டியிலும், இப்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இப்போது நடைபெற்று வரும் டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே ரோஹித் சர்மா மட்டுமல்லாமல் பும்ரா , முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பல்வேறு காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் தொடரை மிஸ் செய்தனர். இந்நிலையில் ரோகித் சர்மா தனக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் 22ஆம் தேதி நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் ரோகித் களம் காண வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும் ரோகித் சர்மா காயத்தால் மீண்டது குறித்தும், அடுத்த டெஸ்ட்டில் விளையாடுவது குறித்தும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடவில்லை.

-ஷர்நிதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com