கருணையே இல்லாமல் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கும் மும்பை அணி

கருணையே இல்லாமல் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கும் மும்பை அணி

கருணையே இல்லாமல் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கும் மும்பை அணி
Published on

துபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்காக ரோகித்தும், டி காக்கும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். 

ஆரம்பம் முதல் டெல்லி பந்துவீச்சை அதிரடியாக அடித்து விளையாடினர் இருவரும். 21 பந்துகளில் 41 ரன்களை குவித்தனர். அதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். 

டி காக் 20 ரன்களில் அவுட்டானார். ரோகித் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர்களது ஆட்டம் ‘மும்பைக்கு தான் கோப்பை’ என அடித்து சொல்வதை போல இருந்தது. மும்பை அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசியுள்ளார். ரபாடா ஓவரில் பவுண்டரிகளாக அடித்து தள்ளினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com