"அடுத்த ஓராண்டில் ரிஷப் பன்ட் வேற லெவலில் இருப்பார்!" - பிரக்யான் ஓஜா கணிப்பு

"அடுத்த ஓராண்டில் ரிஷப் பன்ட் வேற லெவலில் இருப்பார்!" - பிரக்யான் ஓஜா கணிப்பு
"அடுத்த ஓராண்டில் ரிஷப் பன்ட் வேற லெவலில் இருப்பார்!" - பிரக்யான் ஓஜா கணிப்பு

அடுத்த ஓராண்டில் கிரிக்கெட் உலகின் தலைச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக ரிஷப் பன்ட் இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நமன் ஓஜா தெரிவித்துள்ளார்.

'ஸ்போர்ட்ஸ்கீடா' இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள நமன் ஓஜா "ரிஷப் பன்ட் ஒவ்வொரு நாளும் தன்னை மெருகேத்திக்கொண்டே வருகிறார். இப்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்றால் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் கீப்பிங் திறமையை மேருகேற்றுவார். டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்வது கடினமான விஷயம். ரிஷப் பன்ட் ஒரு அபாரமான பேட்ஸ்மேன் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது" என்றார்.

மேலும் பேசிய அவர் "இப்போதுள்ள திறமையை அவர் மேலும் வளர்த்துக்கொள்வார். அடுத்த ஓராண்டில் தலைச் சிறந்த விக்கெட் கீப்பராக இருப்பார் என்பது என் நம்பிக்கை. அதேபோல கே.எல்.ராகுலும் தன்னை ஒரு விக்கெட் கீப்பராக வளர்த்துக்கொண்டார். அவருடைய உடற்தகுதி அபாரமாக இருக்கிறது. விக்கெட் கீப்பிங்கின்போது உடற்தகுதி மிகவும் முக்கியம். இந்திய அணிக்கு அவரும் ஒருநாள் மற்றும் டி20களில் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்" என்றார் ஓஜா.

தொடர்ந்து பேசிய நமன் ஓஜா "பேட்டிங்கில் மேட் வின்னராகவும் இருக்கிறார் ராகுல். ராகுலும், ரிஷப் பன்ட் இருவருமே தங்களை மேம்படுத்திக்கொண்டே வருகிறார்கள். எப்போதெல்லாம் ரன்களை விளாசுகிறார்களோ அப்போதெல்லாம் விக்கெட் கீப்பிங் பணியை திறன்பட செய்கிறார்கள். இது மிகவும் முக்கியம்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com