நிறைவேறாத எனது 37 ஆண்டுகால கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றியுள்ளார்: பி.டி.உஷா

நிறைவேறாத எனது 37 ஆண்டுகால கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றியுள்ளார்: பி.டி.உஷா
நிறைவேறாத எனது 37 ஆண்டுகால கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றியுள்ளார்: பி.டி.உஷா

தமது 37 ஆண்டுகால கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றியுள்ளதாக, இந்தியாவின் தங்க மகள் என போற்றப்படும் என முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், 37 ஆண்டுகளுக்கு முன்பு நிவர்த்தி ஆகாத தமது கனவு தற்போது நனவாகியுள்ளதாக  தெரிவித்துள்ளார். 'நன்றி மகனே' என்றும் மனமுருக அவர் பதிவிட்டுள்ளார்.

1984 லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நூல் இழையில் பதக்கத்தை பிடி உஷா தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவும், தனது ட்விட்டர் பக்கத்தில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com