மோரிஸ் கடைசி ஓவர் அதிரடியால் 172 ரன்கள் இலக்கு - வெற்றி பெறுமா பஞ்சாப்

மோரிஸ் கடைசி ஓவர் அதிரடியால் 172 ரன்கள் இலக்கு - வெற்றி பெறுமா பஞ்சாப்
மோரிஸ் கடைசி ஓவர் அதிரடியால் 172 ரன்கள் இலக்கு - வெற்றி பெறுமா பஞ்சாப்

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இன்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல்லும், ஆரோன் ஃபின்சும் விரைவில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். கேப்டன் கோலி பொறுப்போடு விளையாடி 39 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். 

ஒருபக்கம் பெங்களுரு அணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்த நிலையில் கோலி நிதானமாக ஆடினார். மோரிஸ் 8 பந்துகளில் 25 ரன்களை சேர்த்தார்.

இருபது ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்து பெங்களூரு. 

பஞ்சாப் அணிக்காக ஷமியும், முருகன் அஷ்வினும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 172 ரன்களை பஞ்சாப் விரட்டி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com