"“யார்ரா நீ? எங்கேந்து டா புடிச்சாங்க உன்ன?" ஷர்துல் தாக்கூர் குறித்து அஷ்வின்

"“யார்ரா நீ? எங்கேந்து டா புடிச்சாங்க உன்ன?" ஷர்துல் தாக்கூர் குறித்து அஷ்வின்
"“யார்ரா நீ? எங்கேந்து டா புடிச்சாங்க உன்ன?" ஷர்துல் தாக்கூர் குறித்து அஷ்வின்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் மேலும் மூன்று நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர், முதல் இன்னிங்ஸில் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17.5 ஓவர்களை வீசிய அவர் 61 ரன்களை கொடுத்திருந்தார். இந்திய அணியின் மற்ற பவுலர்கள் எல்லாம் விக்கெட் எடுக்க தடுமாறிய போது தாக்கூர் விக்கெட் மழை பொழிந்தார். 

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அஷ்வின், தாக்கூரை பாசிட்டிவாக கமெண்ட் செய்துள்ளார். அவரது கமெண்ட் ஆடுகளத்தில் இருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி உள்ளது. அது தற்போது ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. 

“யார்ரா நீ? எங்கேந்து டா புடிச்சாங்க உன்ன? நீ பால் போட்டாலே விக்கெட் விழும்” என அஷ்வின் சொல்லியுள்ளார். இந்த ஆட்டத்தில் ரிவ்யூ செய்த போது வீரர்கள் அனைவரும் களத்தில் ஒன்றாக குழுமியிருக்க அஷ்வின் இதனை சொல்லியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com