ரஞ்சி டிராபி தொடரில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 322 ரன்களை சேஸ் செய்து மேற்குவங்க அணி வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றப் போட்டியில் முதல் இன்னிங்சில் டெல்லி அணி 240 ரன்னும், மேற்குவங்க அணி 220 ரன்னும் எடுத்தன. டெல்லி அணி இரண்டாது இன்னிங்ஸில் 301 ரன்கள் எடுக்க, மேற்குவங்க அணிக்கு 322 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மேற்குவங்க அணியில் அபிஷேக் ராமன், அபிமன்யூ ஈஸ்வரன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அபிஷேக் 52 ரன்னில் ஆட்டமிழக்க அபிமன்யூ தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. பின்னர் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் சரிந்தது. இருப்பினும், அடுத்து வந்த அனுஸ்தப் மஜும்தர் நிதானமாக விளையாடி ஒத்துழைப்பு அளிக்க, அபிமன்யூனி அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
இறுதியில், மேற்குவங்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து வெற்றியை எட்டியது. அபிமன்யூ 211 பந்தில் 183 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல், மஜும்தார் 69 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது.