ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ல் தொடங்கி அக்டோபர் 15 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஷெட்யூலில் இருந்து விலகுவதாக அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்  தெரிவித்துள்ளார். இது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பென் ஸ்டோக்ஸ் மனநலனை காரணம் காட்டி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி அளித்துள்ள நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக பட்லர் தெரிவித்துள்ளார். 

2018 சீசன் முதல் பட்லர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். அதன் மூலம் அந்த அணிக்காக ஐபிஎல் அரங்கில் மொத்தம் 1441 ரன்களை எடுத்துள்ளார் அவர். 

பட்லருக்கு மாற்றாக நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com