நின்றது மழை: பேட்டிங்கில் நங்கூரமிட்ட எல்கர்.. தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய அணி

நின்றது மழை: பேட்டிங்கில் நங்கூரமிட்ட எல்கர்.. தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய அணி
நின்றது மழை: பேட்டிங்கில் நங்கூரமிட்ட எல்கர்.. தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி ஜோகன்னஸ்பர்க் நகரின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 140 ரன்களை கடந்துள்ளது. கூடுதலாக மேலும் 100 ரன்கள் சேர்ப்பதன் மூலம் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும். 

மழையினால் நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் இரண்டு செஷன்கள் முழுவதுமாக கைவிடப்பட்டது. இருப்பினும் மழை நின்றுள்ள காரணத்தால் ஆட்டம் தொடங்கி உள்ளது. 

118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தற்போது நான்காம் நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா தொடங்கி உள்ளது. எப்படியும் இன்றைய நாள் ஆட்டத்தில் 34 ஓவர்கள் வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 20 சதவிகிதம்தான் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படியே இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றாலும் எல்கர், ராசி வான்டர் டூசன் மற்றும் பவுமா விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் துரிதமாக கைப்பற்ற வேண்டும். அதை செய்தால் தென்னாப்பிரிக்க அணி மீது அழுத்தம் செலுத்த முடியும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com