தோல்விக்குப் பிறகு கண் கலங்கிய ரோகித் சர்மா - ஆறுதல் கூறிய ட்ராவிட்; வைரலாகும் வீடியோ!

தோல்விக்குப் பிறகு கண் கலங்கிய ரோகித் சர்மா - ஆறுதல் கூறிய ட்ராவிட்; வைரலாகும் வீடியோ!
தோல்விக்குப் பிறகு கண் கலங்கிய ரோகித் சர்மா - ஆறுதல் கூறிய ட்ராவிட்; வைரலாகும் வீடியோ!

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தநிலையில், அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண் கலங்கியபோது, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆறுதல் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

8-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் அடிலெய்டு ஓவலில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து துவக்க வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ் (86) மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் (80) ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தினர்.

மிகவும் அழுத்தம் நிறைந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரர்களான கே.எல். ராகுல் (5) மற்றும் கேப்டன் ரோகித் சர்மா (27) சரியான தொடக்கத்தை கொடுக்காதது, பவுலர்கள் அதிக ரன்களை கொடுத்தது மட்டுமின்றி விக்கெட் எடுக்காதது, மோசமான பீல்டிங் ஆகியவற்றால் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. எனினும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் விராட் கோலி மட்டுமே பேட்டிங்கில் பொறுப்புடன் ஆடினர்.

இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நாக் அவுட் ஆகியதும் ரோகித் சர்மா கண் கலங்கி சோகமாக இருந்தார். அவரது கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட், ரோகித் சர்மாவின் முதுகை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com