உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து

துபாயில் நடைபெறும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ‌

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சிந்து இரண்டாவது ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை சயாகா சட்டோவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-13, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த், முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சனிடம் தோல்வியடைந்து இருந்தார். இரண்டாவது ஆட்டத்தில் தைவான் வீரர் ச்சோ டியான் சென்னை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தைவான் வீரர் 21-18, 21-18 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com