"நான் ஓய்வு பெறுகிறேன்" பி.வி.சிந்து அறிக்கை சொல்வது என்ன ?

"நான் ஓய்வு பெறுகிறேன்" பி.வி.சிந்து அறிக்கை சொல்வது என்ன ?
"நான் ஓய்வு பெறுகிறேன்" பி.வி.சிந்து அறிக்கை சொல்வது என்ன ?

நான் ஓய்வுப்பெறுகிறேன் என்று பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பி.வி. சிந்து வெளியிட்டுள்ள அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெறுவதாகச் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானது. ஆனால் அந்த அறிக்கையில் பிவி சிந்து "டென்மார்க் ஓபன் போட்டி தான் கடைசி. நான் ஓய்வு பெறுகிறேன். இதை எதிர்கொள்ள நான் தடுமாறுகிறேன். அதனால் தான் நான் முடித்துக்கொண்டுவிட்டேன் என இதைப் பற்றி நான் எழுதுகிறேன். இதைப் படித்து நீங்கள் அதிர்ச்சியடைந்தால் அது புரிந்துகொள்ளக் கூடியதே".

மேலும் " இதை முழுவதும் படித்து முடிக்கும்போது என் கோணத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதற்கு நீங்களும் ஆதரவும் தருவீர்கள். இந்தக் கொரோனா தொற்று எனக்குப் புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் எதிரளியை வீழ்த்த என்னால் கடுமையாகப் பயிற்சி பெற முடியும். ஆனால் கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸை எப்படித் தோற்கடிக்க முடியும் ? பல மாதங்களாக வீட்டுக்குள் இருக்கிறோம். ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் பல கேள்விகளை எதிர்கொள்கிறோம். இந்தியாவுக்காக டென்மார்க் போட்டியில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதானால் விலக முடிவெடுத்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார் சிந்து.

மேலும் "எதிர்மறைச் சிந்தனைகள், தொடர்ச்சியான பயம் போன்றவற்றிலிருந்து விலகவுள்ளேன். வைரஸ் தொடர்பான தவறான அணுகுமுறையிலிருந்து விலகவுள்ளேன். அனைவரும் ஒன்று சேர்ந்து வைரஸை விரட்ட வேண்டும். நம்முடைய முடிவு நம் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும். டென்மார்க் ஓபன் போட்டி நடக்காவிட்டாலும் நான் பயிற்சி பெறுவதைத் தடுக்க முடியாது. போராடாமல் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். இந்தப் பயத்தை ஒழிக்காமல் விட மாட்டேன். பாதுகாப்பான உலகம் உருவாகும்வரை இதைத் தொடர்ந்து செய்வேன்" என தெளிவாக குறிப்பிட்டுள்ளார் பிவி சிந்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com