இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவாலை தோற்கடித்து, பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், தொடரின் மூன்றாம் நிலை வீராங்கனையான சிந்து, முதல் செட்டை 21-16 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சாய்னா நேவால் நெருக்கடி கொடுத்தார். ஒருகட்டத்தில் 19-16 என்ற கணக்கில் சாய்னா முன்னிலை வகித்தார். பின்னர் சமாளித்து விளையாடிய சிந்து, 22-20 என அந்த செட்டைக் கைப்பற்றி, வெற்றியை வசமாக்கினார். இதன் முலம் கடந்த 2014ஆம் ஆண்டு, சாய்னா நேவாலிடம் அடைந்த தோல்விக்கு சிந்து பதிலடி கொடுத்துள்ளார். அரையிறுதியில் தென் கொரியா வீராங்கனையை எதிர்த்து பி.வி. சிந்து விளையாட உள்ளார்.