ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன்னை 14 கோடி ரூபாய்க்கு வாங்கிய பஞ்சாப்!

ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன்னை 14 கோடி ரூபாய்க்கு வாங்கிய பஞ்சாப்!

ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன்னை 14 கோடி ரூபாய்க்கு வாங்கிய பஞ்சாப்!
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் இளம் வீரர் ஜெயே ரிச்சர்ட்சன்னை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் முடிந்த பிக்பேஷ் லீக்கில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சீஸனின் லீடிங் விக்கெட் டேக்கராக உருவெடுத்தார் ரிச்சர்ட்சன். அவரது அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய். அவரது பெயர் ஏலத்தில் வந்ததும் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் விலையை போட்டி போட்டு கேட்டன.

7 கோடி ரூபாய்க்கு மேல் சென்றதும் டெல்லி ஏலத்தில் இருந்து ஜகா வாங்கியது. அப்போது கோதாவில் குதித்த பஞ்சாப் அணி விடாமல் பெங்களூருவுடன் மல்லுக்கட்டியது. 9, 11, 13 என கோடி கணக்கில் ஏலம் எகிற இறுதியில் 14 கோடி ரூபாய்க்கு ரிச்சர்ட்சன்னை சீல் செய்தது பஞ்சாப். 

பிக்பேஷ் தொடரில் 53 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 69 விக்கெட்டுகளை இதுவரை எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com