இந்திய அணிக்குத்தான் நெருக்கடி: நாதன் லியோன்

இந்திய அணிக்குத்தான் நெருக்கடி: நாதன் லியோன்
இந்திய அணிக்குத்தான் நெருக்கடி: நாதன் லியோன்

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்குத்தான் நெருக்கடி என்று ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் முழு உடற்தகுதியை எட்ட முடியும் என தெரிவித்துள்ளார். ஆட்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ராஞ்சியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் லியோன் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவியது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லியோன் கடந்த முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இதே போன்ற காயம் ஏற்பட்டதையும், ஓரிரு நாட்களில் அதிலிருந்து மீண்டதையும் நினைவு கூர்ந்தார். இந்திய அணிக்குதான் நெருக்கடியே தவிர ஆஸ்திரேலிய அணிக்கல்ல என்று குறிப்பிட்ட லியோன், தொடரை தங்களது அணி முழுமையாக இழக்கும் என்று விமர்சகர்கள் கூறியிருந்ததையும் சுட்டிக்காட்டினார். உலகின் சிறந்த அணிகளை தங்கள் அணியால் வெல்ல முடியும் என்றும் லியோன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com