இந்நிலையில், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஏதேனும் ஒன்றை ஐ.சி.சி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளுக்காகத் தேர்வு செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் கருத்து தெரிவித்துள்ளார். அருண் இது குறித்துப் பேசும் போது, “இப்போது, எதிர்காலம் குறித்த காட்சி மிகவும் மங்கலாக உள்ளது. ஊரடங்கு எப்போது முடிவடையும் என்பது எங்களுக்குத் தெரியாது. அது பற்றி எங்களுக்குத் தெரியாதபோது, ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை நாம் எப்படி செய்ய முடியும்? நாங்கள் அரசாங்கத்திடமிருந்து ஒரு தெளிவான முடிவைப் பெற்றவுடன், நாங்கள் உட்கார்ந்து நிலைமையைப் பற்றி ஆராய்வோம். எதிர்காலத்தைப் பற்றிய எதையும் முன்கூட்டியே சொல்வது ஊகமாகிவிடும்”என ஒரு பேட்டியின் போது பி.டி.ஐ யிடம் துமல் கூறியுள்ளார்.