"மீண்டு வாருங்கள் ரிஷப் பண்ட்" - ட்விட்டரில் ரசிகர்கள் உருக்கம்

"மீண்டு வாருங்கள் ரிஷப் பண்ட்" - ட்விட்டரில் ரசிகர்கள் உருக்கம்
"மீண்டு வாருங்கள் ரிஷப் பண்ட்" - ட்விட்டரில் ரசிகர்கள் உருக்கம்

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுதலாகும்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது அவரது கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். பண்ட் காரை ஓட்டிச் சென்றதாகவும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூர்க்கி அருகே காலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அவரின் நெற்றி, முதுகு  மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இப்போது ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ரிஷப் பண்ட்டின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஆபத்தான நிலை எதுவும் இல்லை என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

படுகாயமடைந்துள்ள ரிஷப் பண்ட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. அந்த புகைப்படங்களை பார்த்து சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்னாள் வீரர்களும் இந்நாள் வீரர்களும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதால் நிம்மதியடைந்துள்ள ரசிகர்கள், ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தவற விடாதீர்: டிவைடரில் மோதிய கார்.... நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்!


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com