"தோனியாகவே மாறினார் ரிஷப் பன்ட்"- எம்எஸ்கே பிரசாத் !

"தோனியாகவே மாறினார் ரிஷப் பன்ட்"- எம்எஸ்கே பிரசாத் !
"தோனியாகவே மாறினார் ரிஷப் பன்ட்"- எம்எஸ்கே பிரசாத் !

ரிஷப் பன்ட்டின் பிரச்னையே அவர் தோனியை காப்பியடித்ததுதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ்கீடா இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள எம்எஸ்கே பிரசாத் "தோனியின் நிழலிலேயே இருந்துவிட்டதால் என்னவோ ரிஷப் பன்ட் அவரைப் போலவே நடந்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் தோனியுடன் தன்னை இணைத்து ஒப்பீடு செய்யத் தொடங்கினார். பின்பு தோனியை காப்பியடிக்க தொடங்கினார். அவரின் உடல்மொழியையும் கூட பன்ட் செய்ய தொடங்கினார்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "பின்பு நாங்கள் ரிஷப் பன்ட்டிடம் பேசினோம். தோனி வேறு நீ வேறு என புரியவைத்தோம். தோனியின் திறமை வேறு உன்னுடைய திறமை வேறு என்பதை உணர்த்தினோம். பின்பு அவரின் திறனை அவருக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறினோம்" என்றார் எம்எஸ்கே பிரசாத்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com