இந்திய அணியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும்: மியான்தத்

இந்திய அணியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும்: மியான்தத்

இந்திய அணியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும்: மியான்தத்
Published on

இந்திய கிரிக்கெட் அணியுடனான போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்தத் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் போட்டிகளில், இந்திய அணியுடன் விளையாடுவதை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஜாவீத் மியான்தத் தெரிவித்துள்ளார். தங்கள் தேசத்தின் நலனையும், கௌவரத்தையும் காக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என மியான்தத் கூறியுள்ளார். அவ்வாறு செய்தால்தான், தங்கள் அணிக்கு சர்வதேச அரங்கில் உரிய மரியாதை கிடைக்கும் என்றும் மியான்தத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com