டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் அதிரடியாக நுழைந்த பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் அதிரடியாக நுழைந்த பாகிஸ்தான்
டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் அதிரடியாக நுழைந்த பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று ஆடடங்களின் முடிவுபடி 'குரூப் 2' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையேயான முக்கியமான லீக் ஆட்டம் இன்று அடிலெய்டில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்காளதேசம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களே எடுத்தது.

இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் அரையிறுதிக்கு முன்னேறி விடலாம் என்ற சூழலில் பாகிஸ்தான் அணி தனது இன்னிங்சை துவங்கியது. இறுதியில் அந்த அணி 18.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில் 4வது அணியாக பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. அரையிறுதி சுற்றில் இந்தியா-இங்கிலாந்து, பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோத வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com