"தோனிக்கும், ரெய்னாவுக்கும் நன்றி"- கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்ற சுதீப் தியாகி !

"தோனிக்கும், ரெய்னாவுக்கும் நன்றி"- கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்ற சுதீப் தியாகி !

"தோனிக்கும், ரெய்னாவுக்கும் நன்றி"- கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்ற சுதீப் தியாகி !

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் சுதீப் தியாகி அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநில கிரிக்கெட் வீரரான சுதீப் தியாகி (33) இந்தியாவுக்காக 2009-இல் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். பின்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதுவரை சர்வதேசப் போட்டிகளில் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஆனால் 41 உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார் சுதீப் தியாகி. உத்தரப் பிரதேசம் மாநில ரஞ்சி அணியிலும் இடம்பெற்றார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். இந்நிலையில் அனைத்து வகையான போட்டியிலிருந்தும் சுதீப் தியாகி ஓய்வுப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் "தோனி தலைமையிலான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த முகமது கைஃப், ஆர்.பி.சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் நன்றி. இந்த முடிவை மேற்கொண்டது கடினமானதுதான். ஆனால் வாழ்க்கை அடுத்தக் கட்டத்துக்கு செல்ல வேண்டும்" என்றார் சுதீப் தியாகி.

மேலும் "ஒவ்வொரு வீரருக்கும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். என்னுடைய அந்த விருப்பம் நிறைவடைந்துவிட்டது" என தெரிவித்துள்ளார் சுதீப் தியாகி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com