''நம்ம பையன் நல்லா விளையாடினார்'' - ரிஷாப் பண்ட்க்கு பாராட்டு தெரிவித்த சுரேஷ் ரெய்னா

''நம்ம பையன் நல்லா விளையாடினார்'' - ரிஷாப் பண்ட்க்கு பாராட்டு தெரிவித்த சுரேஷ் ரெய்னா
''நம்ம பையன் நல்லா விளையாடினார்'' - ரிஷாப் பண்ட்க்கு பாராட்டு தெரிவித்த சுரேஷ் ரெய்னா

பங்களாதேஷ் அணிக்கு எதிராக 48 ரன்கள் எடுத்த ரிஷாப் பண்ட்க்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்திய டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்து 314 ரன்கள் எடுத்தது. 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் விளையாடி வருகிறது.

இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா சதம் அடித்தார். பின்னர் 104 (92) ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 77 (92) ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி 26 (27) ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரிஷாப் பண்ட் நிதானமாக விளையாடினார்.

தோனியுடன் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தார் ரிஷாப். அரை சதம் கடப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரிஷாப் பண்ட் 48 (41) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் ரிஷாப் பண்ட் சிறப்பாக விளையாடியதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரிஷாப் பண்ட்க்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார். ரிஷாப் பண்ட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரெய்னா,  ''நம் பையனான ரிஷாப் பண்ட் இன்று சிறப்பாக விளையாடினார். தன்னம்பிக்கையான ஆட்டம். சிறப்பான ஆட்டத்திறன்'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com