“அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசலாம்” - ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை

“அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசலாம்” - ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை

“அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசலாம்” - ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை
Published on

அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தங்களின் பணியைத் தொடர்வார்கள் என ஓபிஎஸ்-ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுவில் ஒற்றை தலைமை வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் குரல்கள் எழுப்பியதை அடுத்து, மறுஅறிவிப்பு வரும்வரை ஊடகம், பத்திரிகைகளில் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செய்தித் தொடர்பாளர்கள் தங்களுடைய பணியைத் தொடரலாம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓபிஸ்-ஈபிஎஸ் கூட்டமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். 

அத்துடன் அதிமுக செய்தி தொடர்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த சசிரேகாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com