\
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் ஆகிறது பைஜூ !

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் ஆகிறது பைஜூ !

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் ஆகிறது பைஜூ !
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சருக்கான ஒப்பந்தத்தை பைஜூ நிறுவனம் பெறுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக சீன மொபைல் நிறுவனமான ஓப்போ இருந்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 79 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் தனது ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் தனது 5 ஆண்டுகால ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

இதையடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை, இந்திய அணி ஒப்போவின் ஜெர்ஸியை அணிந்து விளையாடும். அதற்கு பிறகு செப்டம்பரில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், கல்வி சார்ந்த ஆப் நிறுவனமான பைஜூ வின் பெயரை தாங்கியை ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார்கள்.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் பைஜூ ரவிந்தரன் என்பவரால் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com