இந்திய அணி பேட்டிங்: சாஹல், கோலிக்கு ஓய்வு

இந்திய அணி பேட்டிங்: சாஹல், கோலிக்கு ஓய்வு

இந்திய அணி பேட்டிங்: சாஹல், கோலிக்கு ஓய்வு
Published on

மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தாலும், 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இதனையடுத்து, இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவுற்ற நிலையில், இருஅணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி கேப் டவுன் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். காயம் காரணமாக கோலி அணியில் இடம்பெறவில்லை என ரோகித் சர்மா தெரிவித்தார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோலிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். உனத்கண்ட்-க்கு பதிலாக பும்ராவும், சாஹலுக்குப் பதிலாக அக்ஸர் பட்டேலும் இடம்பிடித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியில் ஸ்முட்ஸ்க்கு பதிலாக ஜோன்கர் மேக்ஸ் என்ற அறிமுக வீரர் களமிறங்குகிறார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com