இந்த இருவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்ஸ் - அனில் கும்ப்ளே புகழ்ந்த அந்த இளம் வீரர்கள் யார்?

இந்த இருவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்ஸ் - அனில் கும்ப்ளே புகழ்ந்த அந்த இளம் வீரர்கள் யார்?
இந்த இருவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்ஸ் - அனில் கும்ப்ளே புகழ்ந்த அந்த இளம் வீரர்கள் யார்?

இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும்தான் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் எனப் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஜியோ சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது அவரிடம் இந்திய அணியில் அடுத்த சூப்பர் ஸ்டார்களாக இருக்கக்கூடிய இரண்டு வீரர்களை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு அவர், பந்துவீச்சுத் துறையில் அர்ஷ்தீப் சிங்கையும் தனது விருப்பமான தேர்வாகக் கூறினார்.

தொடர்ந்து அனில் கும்ப்ளே பேசுகையில், ''அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அவருடைய வளர்ச்சியைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்தத் தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங்கை அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதுகிறேன். பேட்டர்களில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்தி வருகிறார் இஷான் கிஷன். இரட்டைச் சதமெடுத்துள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என நம்பிக்கையாக உள்ளேன்'' என்றார்

இஷான் கிஷன் கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 131 பந்துகளில் 210 ரன்களை விளாசினார். இரட்டை சதமடித்தும் கூட, இஷான் கிஷனுக்கு அதன்பின்னர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் ஆடாததால் இஷான் கிஷனுக்கு ஒரு விக்கெட் கீப்பர் என்ற முறையில் ஆட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மிடில் ஆர்டரில் 4ம் வரிசையில் தான் ஆட வாய்ப்பு கிடைத்தது.

கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார் அர்ஷ்தீப் சிங். 25 ஆட்டங்களில் 39 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியில் 5 முறை நோ பால்களை வீசி அதிர்ச்சி கொடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com