டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு - கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு - கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்திய அணி
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு - கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய அணியினர் பேட்டிங் செய்ய தயாராகி வருகின்றனர். ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக தீபக் சாஹரும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com