நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பரிதாப நிலையில் இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பரிதாப நிலையில் இந்திய அணி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பரிதாப நிலையில் இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாப நிலையில் உள்ளது.

நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களுக்கும், நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய வீ‌ரர்கள், நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். களத்தில் இருந்த விஹாரி 9 (18) ரன்கள், ரிஷப் பண்ட் 4 (14) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்தவர்களில் ஜடேஜா மட்டும் 16 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 46 ஓவர்களில் 124 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக புஜரா 24 ரன்கள் எடுத்திருந்தார்.

நியூசிலாந்து சார்பில் டிரண்ட் போல்ட் 4 விக்கெட்களையும், சவுதி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய நியூநிலாந்து அணி, உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் 58 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதால் நியூசிலாந்து அணி எளிதில் வெற்றிவெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com