ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது வழங்குவது வழக்கம். இந்த நிலையில் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா உட்பட 11 விளையாட்டு வீரர்களுக்கு மேஜர் தயான் சந்த் விருது கொடுத்து கவுரவிக்க பரிந்துரைத்துள்ளது தேசிய விளையாட்டு விருதுகள் குழு.
அதன்படி,
நீரஜ் சோப்ரா (தடகளம்),
ரவி தஹியா (மல்யுத்தம்),
பி.ஆர். ஸ்ரீஜேஷ் (ஹாக்கி),
லவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை),
சுனில் சேத்ரி (கால்பந்து),
மிதாலி ராஜ் (கிரிக்கெட்),
பிரமோத் பகத் (பேட்மிண்டன்),
சுமித் ஆன்டில் (தடகளம்),
அவனி லேகாரா (ஷூட்டிங்),
கிருஷ்ணா நாகர் (பேட்மிண்டன்)
மணீஷ் நர்வால் (ஷூட்டிங்) என 11 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதே போல 35 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அளிக்கவும் பரிந்துரை செய்துள்ளது தேசிய விளையாட்டு விருதுகள் குழு.