17 ரன்னில் "ஆல் அவுட்"-பரிதாபமாக தோற்ற நாகலாந்து!

17 ரன்னில் "ஆல் அவுட்"-பரிதாபமாக தோற்ற நாகலாந்து!

17 ரன்னில் "ஆல் அவுட்"-பரிதாபமாக தோற்ற நாகலாந்து!

மகளிருக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்களில் நாகலாந்து அணி ஆல் அவுட்டானது. இதனையடுத்து இந்த 17 ரன்களை 4 பந்துகளில் விரட்டி வெற்றிப்பெற்றது மும்பை மகளிர் அணி.

இந்தூர் நகரின் ஹோல்கார் மைதானத்தில் இந்திய மகளிருக்கான ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டியில் நாகலாந்து - மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாகலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீராங்கனைகள் மும்பை மகளிரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் முதல் 4 வீராங்கனைகள் டக் அவுட்டாகி வெளியேறினர்.

நாகலாந்து அணியின் 7-ஆவது வீராங்கனையான சரிபா மட்டும் 9 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் சயாலி சத்கரே அபாரமாக பந்துவீசி 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து 17 ரன்னில் நாகலாந்து அணி ஆட்டமிழந்தது. இதனையடுத்து 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி 4 பந்துகளில் இலக்கை விரட்டி வெற்றிக் கண்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com