சக வீரரை அடிக்க கையை ஓங்கிய பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் !

சக வீரரை அடிக்க கையை ஓங்கிய பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் !
சக வீரரை அடிக்க கையை ஓங்கிய பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் !

பங்களாதேஷில் பங்கபந்து டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் முன்னணி வீரரான முஷ்பிகிர் ரஹீம் சக வீரர் ஒருவரை அடிக்க கையை ஓங்கிய வீடியோ இப்போது வரைலாகி வருகிறது.

பங்கபந்து டி20 தொடரில் இப்போது 20 போட்டிகள் முடிவடைந்துள்ளன. எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டியில் தாக்கா - பரிஷல் அணிகள் மோதியது. தாக்கா அணிக்கு கேப்டன், விக்கெட் கீப்பராக இருப்பவர் முஷ்பிகிர் ரஹீம். அப்போது 17 ஆவது ஓவரின்போது பரிஷல் அணி 19 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல். பரிஷல் அணியின் அபீஃப் ஹசைன் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது 17 ஆவது ஓவரின் கடைசிப் பந்தை அபீஃப் ஹூசைன் தூக்கியடிக்க அது எட்ஜ் ஆகி பந்து மேலே சென்றது, அது தன்னுடைய கேட்ச் என சொல்லிக்கொண்டே ரஹீம் ஓடி வர, அந்தப் பந்தை பிடிக்க பீல்டரான நசும் ஓடி வர இருவரும் மோதிக்கொள்வது போல சென்றனர். ஆனால் இறுதியாக அந்த கேட்சை ரஹீம் பிடித்தார். பந்தை பிடித்தவுடன் நசூமை அடிக்க கையை ஓங்கியபடி பாய்ந்தார், கண்டபடி வசைபாடினார். பின்பு சக வீரர்கள் ரஹீமை சமாதாப்படுத்தினர்.

இறுதியாக டாக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. ஆனாலும் பங்களாதேஷ் தேசிய அணியின் முக்கிய வீரரரும், மூத்த வீரருமான ரஹீமின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com