"தோனி சிஎஸ்கேவுக்கு முழு அர்ப்பணிப்பையும் கொடுப்பார்"-அனில் கும்பளே !

"தோனி சிஎஸ்கேவுக்கு முழு அர்ப்பணிப்பையும் கொடுப்பார்"-அனில் கும்பளே !
"தோனி சிஎஸ்கேவுக்கு முழு அர்ப்பணிப்பையும் கொடுப்பார்"-அனில் கும்பளே !

சிஎஸ்கே அணிக்காக தோனி தன்னுடைய 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பளே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் இந்தாண்டு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. துபாயில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் காண்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னாவும், ஹர்பஜன் சிங்கும் தொடரில் இருந்து சொந்தக் காரணங்கள் காரணமாக விலகியுள்ளனர். ஆனாலும் அணி முழு பலத்துடன் தோனி தலைமையில் துபாயில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

தோனி குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பளே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் "தோனி தன்னுடைய 100 சதவீத அர்ப்பணிப்பை சிஎஸ்கே அணிக்காக கொடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நானும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்புதான் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றேன்" என்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com