'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்

'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்
'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்

இந்திய அணியில் ஒருகாலத்தில் விக்கெட் கீப்பராக இருந்தவர் பார்த்திவ் பட்டேல். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடாததால், அவ்வப்போது அணியில் நுழைவதும் வெளியேறுவதும் வழக்கமாக கொண்டிருந்தார். இவருக்கு அடுத்தபடியாக அணியில் சேர்ந்தார் தினேஷ் கார்த்திக், அவரும் பெரிய அளவில் எடுபடவில்லை. அப்போதுதான் அணிக்கு வந்தார் தோனி, அதன் பின் நிகழ்ந்ததெல்லாம் சாதனை வரலாறு.

இந்நிலையில் ‘பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ எனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்திவ் படேல் மனம் திறந்து பல விஷயங்களை பேசியுள்ளார் அதில் "தோனி கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்துக்கு முன்பே நாங்கள் எல்லாம் (அப்போதைய விக்கெட் கீப்பர்கள்) கிரிக்கெட் விளையாடி பயிற்சி எடுக்கத் தொடங்கிவிட்டோம். ஆனால் நாங்கள் சரியாக விளையாடவில்லை. அப்படி சரியாக நாங்கள் விளையாடி இருந்தால் இன்று தோனியால் இடம் கூட பிடித்திருக்க முடியாது. முதலிடமும் கிடைத்திருக்காது.

ஆனால், கிரிக்கெட்டில் தோனி மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. பலர் என்னிடம் வந்து நீ பிறந்த ஆண்டு சரியில்லை, நீ சில ஆண்டுகள் முன்கூட்டியோ அல்லது பல ஆண்டுகளுக்குப் பின்போ பிறந்திருக்க வேண்டும் என கூறினர். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால் நானும் தினேஷ் கார்த்திக்கும் எங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தி விளையாடாத காரணத்தால்தான் தோனி அணிக்குள் வந்தார் . ஆனால், மனசாட்சிபடி கூற வேண்டுமென்றால் தோனி அளவுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதுதான் நிதர்சனம். தோனியின் வெற்றிக்கு நாங்கள்தான் காரணம். நாங்கள் இல்லாமல் தோனியின் வெற்றி இல்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com