செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்கிறார் எம்.எஸ்.தோனி!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்கிறார் எம்.எஸ்.தோனி!
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்கிறார் எம்.எஸ்.தோனி!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி கலந்துகொள்ள உள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழர் பெருமையை பறைசாற்றும் வகையிலும் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகள் கவனம் பெற்றன.

இதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் 9-ம் தேதி நிறைவு விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்.எஸ்.தோனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களும் நிறைவு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com