சென்னை வந்தார் தோனி! மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை வந்தார் தோனி! மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்
சென்னை வந்தார் தோனி! மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்

ஐபிஎல் போட்டிகளுக்கு பயிற்சி எடுப்பதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி நேற்று சென்னை வந்தார். இதனையடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டித் தொடரில் பயிற்சி செய்வதற்காக தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து தோனியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்தாண்டு ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. கடந்தாண்டும் பயிற்சிக்காக சென்னை வந்த தோனி தன்னுடைய ஓய்வை சென்னையில் இருந்துதான் அறிவித்தார். அப்போது சுரேஷ் ரெய்னாவும் தன் ஓய்வை அறிவித்தார். ஆனால் சென்னை அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இப்போது பயிற்சிக்காக சென்னை வந்துள்ள தோனியுடன் விரைவில் அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா மற்றும் சில உள்ளூர் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com