‘நீங்கள் எப்போதுமே என் கேப்டன் தான்’ தோனிக்கு நன்றி தெரிவித்த விராத் கோலி

‘நீங்கள் எப்போதுமே என் கேப்டன் தான்’ தோனிக்கு நன்றி தெரிவித்த விராத் கோலி
‘நீங்கள் எப்போதுமே என் கேப்டன் தான்’ தோனிக்கு நன்றி தெரிவித்த விராத் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி.

'நீங்கள் எப்போதும் என் கேப்டன் தான்’ என பி.சி.சி.ஐ -யின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலமாக தோனிக்கு நன்றி சொல்லி பிரியா விடை கொடுத்துள்ளார் கோலி. “வாழ்க்கையின் சில தருணங்களில் வார்த்தைகளே வராமல் ஸ்தம்பித்து நிற்போம். அப்படி ஒரு தருணமாக இதை பார்க்கிறேன். 

உங்களுக்கு எனக்கும் இடையே சிறந்த நட்புறவும், புரிதலும் இருந்தது. நீங்கள் எப்போதுமே அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்ற குறிக்கோளோடு இறுதி வரை விளையாடுவீர்கள். 

என் கிரிக்கெட் வாழ்க்கையே உங்களது தலைமையின் கீழ் நான் ஆரம்பித்தது எனக்கு பெரு மகிழ்ச்சி. நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு என்றுமே நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். இப்போது மட்டுமல்ல எப்போதுமே நீங்கள் தான் என் கேப்டன். உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்” என தெரிவித்துள்ளார் விராத் கோலி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com