கொரோனா தாக்கம்: கால்பந்து தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணி

கொரோனா தாக்கம்: கால்பந்து தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணி

கொரோனா தாக்கம்: கால்பந்து தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணி
Published on

இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் 12க்கும் மேற்பட்ட வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆசிய கோப்பை கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியது.

சீன தைபே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா களம் காண்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் ஏற்கனவே இரண்டு வீராங்கனைகள் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியிருந்ததால் இந்தியாவால் போட்டியில் களமிறங்கும் 13 வீராங்கனைகளின் பெயர்களை அளிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஆட்ட விதிகளின்படி இந்தியா தொடரிலிருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெறும் அணிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com