MI vs KXIP : பஞ்சாப்புக்காக இரண்டு கேட்ச்களை பிடித்த தமிழக வீரர் முருகன் அஷ்வின்

MI vs KXIP : பஞ்சாப்புக்காக இரண்டு கேட்ச்களை பிடித்த தமிழக வீரர் முருகன் அஷ்வின்
MI vs KXIP : பஞ்சாப்புக்காக இரண்டு கேட்ச்களை பிடித்த தமிழக வீரர் முருகன் அஷ்வின்

துபாயில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட் செய்து வருகிறது.

பவர் பிளே ஓவர் முடிவில் 43 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை.

ரோகித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் என மூன்று பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

அதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் அவுட்டாக முக்கிய காரணமாக அமைந்தது பஞ்சாப் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் முருகன் அஷ்வின் எடுத்த இரண்டு கேட்ச். 

சூர்யகுமாரை இன்னர் சர்க்கிளிலும், கிஷனை தேர்ட் மேன் திசையிலும் நின்று கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்பத்தை கொடுத்தார் முருகன் அஷ்வின். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com