இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட்: மெல்போர்ன் மைதானமும் தயார் - காரணம் என்ன?

இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட்: மெல்போர்ன் மைதானமும் தயார் - காரணம் என்ன?

இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட்: மெல்போர்ன் மைதானமும் தயார் - காரணம் என்ன?
Published on

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3-வது டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக மெல்போர்ன் மைதானமும் அப்போட்டியை நடத்த தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக நடந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2 ஆவது டெஸ்ட் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலிய நம்பிக்கை நட்சத்திரமான டேவிட் வார்னர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. 

இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கிடையேயான 3-ஆவது டெஸ்ட் போட்டி  ஜனவரி 7ஆம் தேதி சிட்னியில் தொடங்க உள்ளது. ஆனால் சிட்னி பகுதியில் கொரோனா தீவிரமடைய தொடங்கியுள்ளதை தொடர்ந்து அங்கு டெஸ்ட் போட்டி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆவது போட்டியை நடத்த மெல்போர்ன் மைதானமும் தயார் நிலையில் இருக்கும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 3ஆவது டெஸ்ட் எங்கு நடக்கும் என்பது குறித்த உறுதியான முடிவு 2ஆவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com