பெருவிரல் மல்யுத்த சாம்பியன்ஷிப்: 14 ஆண்டுகளாக பட்டம் வெல்லும் வீரர்

பெருவிரல் மல்யுத்த சாம்பியன்ஷிப்: 14 ஆண்டுகளாக பட்டம் வெல்லும் வீரர்
பெருவிரல் மல்யுத்த சாம்பியன்ஷிப்: 14 ஆண்டுகளாக பட்டம் வெல்லும் வீரர்

இங்கிலாந்தில் நடைபெற்ற பெருவிரல் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். இதில் நாஸ்டி நாஷ் என்பவர் 14 ஆண்டுகளாக கோப்பையை வென்று வருகிறார்.

இங்கிலாந்தின் டார்பிஷர் பகுதியில் நடைபெறும் கால் பெருவிரல்களுக்கான மல்யுத்த போட்டி மிகவும் பிரபலமானது. எதிரெதிராக இரண்டு பேர் அமர்ந்து கொண்டு, ஒருவரின் கால் பெரு விரலை மற்றொருவரின் கால் விரலால் பிடித்தபடி பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ள பலகையில் கால் தொடும்படி இழுக்க வேண்டும். விதிபடி யாருடைய கால் பலகையில் படுகிறதோ அவர் தோல்வியடைந்தவர் ஆவார்.

14 ஆம் ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் நாஸ்டி நாஷ் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் பட்டத்தை தட்டி சென்றார். பெண்கள் பிரிவில் ரெபேகா பீச் என்பவர் வெற்றி பெற்றார். வேடிக்கையான இப்போட்டியில் கலந்து கொண்டவர்களை பார்வையாளர்கள் பலரும் உற்சாகப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com