சிக்னல் கொடுத்த மெக்கல்லம்! ஸ்ரேயாஸை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மேத்யூ பாட்ஸ்!

சிக்னல் கொடுத்த மெக்கல்லம்! ஸ்ரேயாஸை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மேத்யூ பாட்ஸ்!

சிக்னல் கொடுத்த மெக்கல்லம்! ஸ்ரேயாஸை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மேத்யூ பாட்ஸ்!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பண்ட் மற்றும் ஜடேஜா சதத்தின் உதவியுடன் 416 ரன்களை குவித்தது இந்திய அணி. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ மட்டும் சதமடிக்க, மற்றவர்கள் சொதப்பியதால் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் களமிறங்கியது இந்திய அணி. சுப்மான் கில், விஹாரி, கோலி ஆகிய மூவரும் இங்கிலாந்து பவுலர்களிடம் வரிசையாக விக்கெட்டை பறிகொடுக்க, நெருக்கடியான தருணத்தில் இணை சேர்ந்தனர் புஜாரா மற்றும் ரிஷப் பண்ட்.

இருவரும் அரைசதம் கடந்தபோது புஜாரா விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். அப்போது பெவிலியனில் இருந்த இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் பவுலர்களிடம் “ஷார்ட் பால்” என்று சைகை காட்டினார். ஏனென்றால் முதல் இன்னிங்சில் ஸ்ரேயாஸ் ஒரு ஷார்ட் பாலில் தான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மெக்கல்லமின் சைகையை சரியாக புரிந்துகொண்ட மேத்யூ பாட்ஸ் ஒரு வேகமான ஷார்ட் பால் பவுன்சரை வீசினார். ஸ்ரேயாஸ் அடித்த அந்த பந்து மிட்-விக்கெட்டில் நின்றிருந்த ஆண்டர்சனிடம் சரியாக கேட்ச் ஆனது. விரக்தியில் பெவிலியனை நோக்கி நடையை கட்டினார் ஸ்ரேயாஸ்.

இந்த ஆண்டு ஐபிஎல்லில், கொல்கத்தா அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்ததும் அந்த அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தனது அணியின் வீரரின் பலவீனத்தை சரியாக கணித்து அவரது விக்கெட்டை வீழ்த்த வியூகம் அமைத்திருக்கிறார் மெக்கல்லம். ஸ்ரேயாஸும் எதிர்பார்த்தது போலவே வீழ்ந்து இருக்கிறார். இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் “வலையில் சரியாக சிக்கினார்” என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com