இன்று இறுதிப் போட்டி: லார்ட்ஸில் விமானங்கள் பறக்கத் தடை!

இன்று இறுதிப் போட்டி: லார்ட்ஸில் விமானங்கள் பறக்கத் தடை!
இன்று இறுதிப் போட்டி: லார்ட்ஸில் விமானங்கள் பறக்கத் தடை!

உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தின் மேலே இன்றும் நாளையும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது மைதானத் துக்கு மேலே, ’பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்ற பேனரை சுமந்தபடி தனியார் விமானம் ஒன்று பறந்தது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் லீட்ஸில் இந்தியா- இலங்கை அணிகள் மோதிய போட்டியின் போது, விமானம் ஒன்று ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற பேனரை சுமந்தபடி சென்றது. இதற்கு ஐசிசி அதிருப்தியை தெரிவித்தது.

இதுபற்றி ஐசிசி விடுத்த அறிக்கையில், ‘’விமானத்தின் மூலம் அரசியல் பேனர்களை விடும் சம்பவம் மீண்டும் நடந்துள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். உலகக் கோப்பை தொடரில், எந்த அரசியல் கோஷங்களையும் ஆதரிப்பதில்லை. இதற்கு முன் நடந்த சம்பவத்தின்போது மேற்கு யார்க்‌ஷையர் போலீசார், இனி இப்படி நடக்காது என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் மீண்டும் இப்படி நடந்திருப்பது அதிருப்தியை அளிக்கிறது’’ என்று தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு எதிராக, இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி-க்கு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தது. அதற்கு, இனி, அப்படி நடக்காது என்று உறுதியளித்தது ஐசிசி. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அதை கூறியிருந்தது. இதையடுத்து இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியின்போது, ஓல்டு டிராஃபோர்டு மைதானத்துக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இங்கிலாந்து - நியூசிலாந் து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியின் போதும் அரசியல் வாசகங்கள் அடங்கிய பேனருடன் விமானங்கள் பறக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தின் மேலே விமானங்கள் பறக்க இன் றும் நாளை (ரிசர்வ் டே)யும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com