கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா
Published on

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா, வரும் 26 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அந்த அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் இவருக்கு வயது 36. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது இலங்கை அணி. இதை யடுத்து அவர் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் பங்களாதேஷ் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட வந்துள்ளது. இந்த இரு அணிகளுக்கான முதல் போட்டி வரும் 26 ஆம் தேதி நடக்கிறது. இதில் பங்குபெறும் மலிங்கா, அந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இத்தகவலை இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே கொழும்பில் நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘’பங்களாதேஷ் அணியுடன் நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியோடு ஓய்வு பெறுகிறேன் என்று மலிங்கா என்னிடம் சொன்னார். ஆனால் அணி தேர்வு குழுவிடம் என்ன சொன்னார் என்று தெரியாது’’ என்றார் கருணா ரத்னே.

ஓய்வுக்குப் பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com