அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்று வரும் 13வது லீக் ஆட்டத்தில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த மும்பை அணி இருபது ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்துள்ளது.
பலமான பேட்டிங் லைன் அப் கொண்ட மும்பை அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா மட்டுமே ஆறுதல் கொடுத்தார். 45 பந்துகளில் 70 ரன்களை எடுத்து ரோகித் அவுட்டானார். பொல்லார்டும், பாண்டியவும் கடைசி நான்கு ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பஞ்சாப் அணி சார்பில் காட்றல் சிறப்பாக பந்து வீசியிருந்தார். பஞ்சாப் அணி 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்குகிறது.