பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறினார் அஸ்வின்!

பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறினார் அஸ்வின்!
பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறினார் அஸ்வின்!

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அந்த அணியில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக, கடந்த 2 தொடர்களாக செயல்பட்டு வந்தார் அஸ்வின். 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், கேப்டனாக 28 போட்டிகளில் 25
விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் கேப்டனாக செயல்பட்ட 2 ஐபிஎல் தொடர்களில், லீக் சுற்றோடு பஞ்சாப் வெளியேறியது.

இதையடுத்து, பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க அந்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கே.எல்.ராகுல் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.  இந்நிலையில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். அவரது ஆலோசனையின் படி, அஸ்வினை பஞ்சாப் அணியே தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. 

இதுபற்றி பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா கூறும்போது, ‘ அஸ்வினை, டெல்லி அணிக்கு நாங்கள் மாற்றவில்லை. முதலில் நாங்கள் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்துள்ளோம். அவர் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அஸ்வினை, டெல்லி அணி வாங்கியுள்ளது. அவர் ரூ.1.5 கோடிக்கு  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அணிகளுக்கிடையே வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான கெடு 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com