ஐபிஎல் 2021: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றமா?

ஐபிஎல் 2021: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றமா?
ஐபிஎல் 2021: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றமா?

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் என மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்யலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த வாரம், 1,097 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருப்பதாக முதல்கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான வீரர்களின் பெயர்களை அணிகள் தேர்வு செய்தன.

இதனால் தற்போது ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 292 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில், முதற்கட்டப் பட்டியலில் இடம்பெறாத 17 புதிய வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். அணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த 17 வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் உள்ள வீரர்களே ஏலத்தில் கலந்துகொள்வார்கள். இந்நிலையில் 'கிங்ஸ் லெவன் பஞ்சாப்' அணியின் பெயர் 'பஞ்சாப் கிங்ஸ்' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்தப் பெயர் மாற்றம் குறித்த தகவல்களை பிசிசிஐயிடம் பஞ்சாப் அணி நிர்வாகம் முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்ததாகவும் அதற்கு பிசிசிஐ ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பெயர் மாற்றம் குறித்து முறையான அறிவிப்பை அணி நிர்வாகம் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு முன்பாத அறிவிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு முறை இரண்டாம் இடமும், ஒரு முறை 3 ஆம் இடமும் பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com