ஐபிஎல் போட்டிகளுக்கு முன் தேசிய கீதம்: பிசிசிஐ-க்கு கோரிக்கை

ஐபிஎல் போட்டிகளுக்கு முன் தேசிய கீதம்: பிசிசிஐ-க்கு கோரிக்கை
ஐபிஎல் போட்டிகளுக்கு முன் தேசிய கீதம்: பிசிசிஐ-க்கு கோரிக்கை

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியின் போதும், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். இதே போல, ஐபிஎல் தொடரிலும் போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கும் முறையை கொண்டு வரவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

(பிரீத்தி ஜிந்தாவுடன் நெஸ் வாடியா)

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘செலவைக் குறைப்பதற்காக ஐபிஎல் தொடக்க விழாவை நிறுத்தியது சரியான நடவடிக்கை. ஐபிஎல்-லில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் கால்பந்து லீக்-கிலும், புரோ கபடியிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இதுபற்றி ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறேன். இப்போது சவுரவ் கங்குலி தலைவராக உள்ளதால் அவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com