அஸ்வின், ஜடேஜா இடத்தை நிரப்புவதாக சிந்தித்ததே இல்லை: குல்தீப்

அஸ்வின், ஜடேஜா இடத்தை நிரப்புவதாக சிந்தித்ததே இல்லை: குல்தீப்
அஸ்வின், ஜடேஜா இடத்தை நிரப்புவதாக சிந்தித்ததே இல்லை: குல்தீப்

இந்திய அணியில் விளையாடும் போது அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் இடத்தை நிரப்புவதாக ஒருபோதும் சிந்தித்தது இல்லை என சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

தனது கிரிக்கெட் அனுபவம் குறித்து கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய குல்தீப், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னேவைப் போல் 50 சதவிகிதம் சாதித்தாலே, அது தனது வாழ்நாள் வெற்றி என்று கூறியுள்ளார். பந்துவீச்சை பொறுத்த வரையில் தனது சிறுவயது முதலே வார்னேவை பின்தொடர்வதாகவும், அவரே தனது பந்துவீச்சிற்கு முன்மாதிரி எனவும் கூறியுள்ளார். தற்போதும் வார்னேவுடன் இணைப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வார்னேவை புகழ்ந்துள்ள குல்தீப், அவரது விமானம் போன்ற ஏற்ற, இறக்க பந்துவீச்சு எந்த பேட்ஸ்மேனையும் ஏமாற்றிவிடும் என்று தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டாலும் தான் வெற்றியடைந்து விட முடியும் என குல்தீப் கூறியுள்ளார். 
இந்திய அணியில் விளையாடும் போது ஒருபோதும் அஸ்வின், ஜடேஜா இடத்தை நிரப்புவதாக நினைத்ததில்லை என்று கூறிய குல்தீப், அவர்கள் நீண்ட காலமாக இந்திய அணியில் சிறப்பாக பங்காற்றியுள்ளதாக கூறியுள்ளார். யஷ்வந்ரா தனக்கு சிறந்த இணை வீரர் என்றும், அவருடன் கலந்தாலோசித்து விளையாடுவதால் எளிதில் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com