கோப்பையை வெல்லும் முனைப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

கோப்பையை வெல்லும் முனைப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
கோப்பையை வெல்லும் முனைப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

14-ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இந்தாண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொண்டது. ஐபிஎல் விளையாடும் 8 அணிகளுக்குமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடந்த முறை தினேஷ் கார்த்திக் சில போட்டிகளுக்கு கேப்டனாகவும்,  இடையில் இயான் மார்கனையும் கேப்டனாக நியமித்தது கொல்கத்தா.

அந்த வகையில் இரண்டு முறை கோப்பையை வென்ற அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்பதற்காகவே தங்கள் அணியை அமைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்காக எவ்வளவு தொகையை ஏலத்தில் செலவழித்தாலும் பரவாயில்லை என்று நினைத்த கொல்கத்தா அணி நிர்வாகம், தாங்கள் நினைத்த கடந்தாண்டு ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸை ரூ.15.50 கோடி கொடுத்து வாங்கியது. இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் 8 வீரர்களை ரூ.10.75 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா.

இதில் அதிகபட்சமாக வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை ரூ.3.2 கோடிக்கு அந்த அணி வாங்கியுள்ளது. இதனால் அந்த அணிக்கு பலம் கூடியுள்ளது. இதுதவிர தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரிவ் ரஸல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், சுப்மன் கில், லக்கி ஃபர்கியூசன், நிதிஷ் ரானா என பலமான அணியாக இருக்கிறது கொல்கத்தா. ஆனால் இந்தாண்டு தொடர் முழுக்கவே இயான் மார்கனே கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிகிறது.

கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்புப்படி, கொல்கத்தா அணியில் ஆண்ட்ரிவ் ரஸல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், நிதிஷ் ரானா, சுப்மான் கில், சுனில் நரைன், பட் கம்மின்ஸ், இயான் மார்கன், லக்கி ஃபர்கியூசன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. இவர்களுடன் மேலும் ஒரு ஆல்ரவுண்டர் அல்லது பவுலரை அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது. அது சந்தீப் சர்மாவாக இருக்கலாம். இந்த அணியை பொருத்தவரையில் பேட்டிங்கில் சுப்மான் கில், இயான் மார்கன், தினேஷ் கார்த்திக், நிதிஷ் ரானா, ஆண்ட்ரிவ் ரஸல், சுனில் நரைன் இருக்கின்றனர்.

இதில் ரஸல் மற்றும் நரைன் ஆல்ரவுண்டர்கள் என்பதால் அவர்கள் விக்கெட்டுகளையும் சாய்ப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ரஸலின் திடீர் விஸ்வரூபம் எப்பேற்பட்ட அணியையும் நிலைகுலையச் செய்துவிடும். ஆனால் கடந்த ஐபிஎல்லில் ரஸல் ஆட்டம் பெரிதளவில் எடுபடவில்லை. பவுலிங்கில் பட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி பலமாக இருப்பார்கள்.

கடந்த ஐபிஎல் போட்டியில் வருண் சக்கரவர்த்தி டெல்லிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினார். மொத்தம் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 17 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். ஆனால் கடந்தாண்டு கேகேஆர் அணி 5 ஆம் இடம் பிடித்ததால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறும் வாய்ப்பை இழந்தது. திறமையானவர்கள் கொண்ட அணிதான் சிறந்த கேப்டன்ஷிப் அமைந்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சவலான அணியாக அமையலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com